Sunday, March 31, 2024

ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம் Shiva slokams | வைத்தியநாத அஷ்டகம் | Shri Vaidyanatha Ashtakam in Tamil

 

 

 

ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம்

 

 

ஸ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத

ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய

ஸ்ரீநீலகண்டாய தயாமயாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 

கங்காப்ரவாஹேந்து ஜடாதராய

த்ரிலோசனாய ஸ்மரகாலஹந்த்ரே

ஸமஸ்த தேவைரபி பூஜிதாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 


பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய

பினாகினே துஷ்டஹராய நித்யம்

ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 

ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக

ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய

ப்ரபாகரேந்த்வக்நிவிலோசனாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 

வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ:

வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய

குஷ்டாதி ஸர்வோன்னதரோ கஹந்த்ரே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 

வேதாந்த வேத்யாய ஜகன்மயாய

யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய

த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ரநாம்னே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 

ஸ்வதீர்த்தம்ருத் பஸ்மப்ருதங்கபாஜாம்

பிஸாசது:க்கார்த்திபயாபஹாய

ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம்

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய

ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய

 

வாலாம்பிகேச வைத்யேச

பவரோக ஹரேதிச

ஜபேந் நாமத்ரயந் நித்யம்

மஹாரோக நிவாரணம்

 

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ.

 

 

Vaidyanatha Ashtakam in English

Shri Vaidyanatha Ashtakam | Lord Shivan Slokams | Vaidyanatha Ashtakam in English

 

 

 

Shri Vaidyanatha Ashtakam

Sree rama soumithri jatayu veda,

Shadanadithya kujarchithya,

Sree neelakandaya daya mayaya,

Sree vaidyanathaya namasivaya.

 

Ganga pravahendu jada dharaya,

Trilochanaya smara kala hanthre,

Samstha devairapi poojithaya,

Sree vaidyanathata namasivaya.

Bhaktha priyaya, tripuranthakaya ,

 

Pinakine dushta haraya nithyam,

Prathyaksha leelaya manushya loke,

Sree vaidyanathaya namasivaya.

 


Prabhootha vadadhi samastha roga,

Pranasa karthre muni vandhthithaya,

Prabhakarennd wagni vilochanaya,

Sri vaidyanathaya nama sivaya.

 

Vakchrothra nethrangiri viheena jantho,

Vakchrothra nethrangiri sukha pradaya,

Kushtadhi sarvonnatha roga hanthre,

Sri Vaidyanathaya nama sivaya.

Vedantha vedhyaya jagan mayaya,

Yogiswara dhyeya Padambujaya,

Trimurthy roopaya sahasra namne,

Sri vaidyanathaya nama sivaya.

 

Swatheertha mrudbasma brudanga bajam,

Pisacha dukha arthi bhayapahaya,

Athma swaroopaya sareera bajaam,

Sri Vaidyanaathaya namasivaya.

 

Sree neelakandaya vrushaba dwajaya,

Sarakkanda basmadhya abhi shobithaya,

Suputhradarathi subagyathaya,

Sri vaidyanathaya nama sivaya.

 

Balambikesa vaidyesa bava roga haredisa,

Japen nama thrayam nithyam maha roga nivaranam

 

Iti Shri Vaidyanatha Ashtakam

 

Shri Vaidyanatha Ashtakam in Tamil

 

Saturday, March 16, 2024

லலிதா சஹஸ்ரநாமத்தில் இரண்டு மந்திரங்கள் உண்டு.

 ஜ்வாலா மாலினிகா க்ஷிப்தா, வஹ்னி ப்ராகார மத்யகா ‘ என்ற வரிகளை திரும்ப திரும்பத் சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார். கூடியிருந்தவர்கள் இந்த மந்திரத்தை முழங்கினார்கள். சற்று நேரத்தில் மேகங்கள் போன இடமே தெரியவில்லை.
மதுரை மீனாக்ஷி கோவிலில் நவராத்திரியின்போது சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் இப்படி சொன்னார் என்று எங்கோ படித்தேன்.

ஸகஸ்ர நாமத்தில் வருகின்ற பெயர்களுக்கு மந்திர சக்தியும் உண்டு. உதாரணமாக ஸ்ரீ லலிதா ஸகஸ்ர நாமத்தில் வரும் ‘ ஸர்வ வ்யாதி ப்ரசமனி ‘ ‘ ஸர்வ மிருத்யு நிவாரிணீ ‘ என்பது, எல்லா வியாதிகளிலிருந்தும், விபத்துகளிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்காக உச்சரிக்கப்படுகிறது.



மொத்தத்தில் சொல்லப்போனால் அம்பிகையுடன் நெருங்கிய நேரடித் தொடர்பு கொள்ளப் பயன்படும் மிகச் சிறந்த மந்திர சாதனமாக லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகின்றது. ஏனெனில் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் வடிவம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம் மந்திரம், தத்துவம், பரிவார தேவதைகள், வழிபாட்டு முறை, வழிபடுபவருக்கான தகுதி, அவளுடைய அருளால் பெறக்கூடிய மேன்மைகள், தேவியைப் பற்றிய நூதனமான பலவிபரங்களும் அந்தந்த மந்திரங்களால் விளக்கப்பட்டு விடுகின்றன.

அம்பிகை வழிபாட்டில் அன்பு, எளிமை, ஆர்வம், பக்தி, அடக்கம் ஆகியவையே மிகமிக முக்கியம்.
ஆடம்பரமான பகட்டான ஆரவாரமான பூஜைகளைக் கண்டு அம்பிகை ஏமாறமாட்டாள்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் இரண்டு மந்திரங்கள் உண்டு.
அந்தர் முக சமாராத்யா,
பஹிர்முக சுதுர்லபா
அவளை நம் உள்ளத்துக்குள் தேடி ஆராதிக்க வேண்டும். வெளிப்புறத்தில் அகப்பட அரிதானவள்.




இப்படியே நம்முடைய உயிர் பிரியும் வரை அவள் புகழ் கூறலாம். எனக்கு பேராசை தான் என்கிறீர்களா!! ஆமாம்!! கரும்பு தேன் சுவைக்க அவள் அருள் மட்டுமே என்றென்றும் வேண்டும். இப்பொழுதே சொல்லி பழகி கொண்டால் கண் சொருகி வாய் அடைத்து மூச்சு தொண்டை குழியில் அடைக்கும் தருணம் அவளின் நாம ஜபத்தை, மனமானது ஜபம் செய்யலாம் என்கிற நப்பாசை தான்.
அப்போ கேட்கறேளா!! ஆசை முழுமையாக போகவில்லையா என்று!!  இல்லை. அவள் மீது
உள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஏனென்றால் அவைகளை நாடகம் போல நடத்துபவள் அவளே!! பிறகு எனக்கு என்ன கவலை!! நீயே கதி ஈஸ்வரீ!!

நன்றி ! இணைய தளம் !

தேவி சரணம்....!

தூங்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

 🙏🙏🙏🙏🙏

1. தூங்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

நாம் உறங்கும் திசை இயல்பாக கிழக்கு மேற்காக இருப்பது சிறப்பு. சூரியன் உதிக்கும் திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இது ஆரோக்கியத்தை குறிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.




2. சமையலறையில் சமைக்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

சூரியன் உதிக்கும் திசையில், கிழக்கு முகமாக நின்று சமைக்கும்போது, சூரிய வெளிச்சம் உள்ளே வரும் படியான அமைப்புகளில் நின்று சமைக்கும்போது சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையான உணவாகவும் சமைக்க முடியும் என்று நமது முன்னோர்கள் ஆரோக்கியத்தை மையமாக வைத்து வலியுறுத்தி உள்ளார்கள்.

3. உணவருந்தும் திசை எப்படி இருப்பது சிறப்பு?

உணவருந்தும் திசை எக்காரணம் கொண்டும் வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தக்கூடாது என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். காரணம் ஆயுளை மையமாக வைத்தே குறிப்பிட்டுள்ளார்கள்.

4. பூஜையறையில் சாமி படங்களை எப்படி இருப்பது சிறப்பு?

பூஜையறையில் உள்ள விக்ரகங்கள் சாமி படங்கள் வடக்கு முகமாக இருப்பது சிறப்பு. நாம் இறைவனை வணங்கும் போது வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ நின்று பக்கவாட்டில் பிரார்த்தனை செய்யும் பொழுது, அந்த பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து நமது முன்னோர்கள் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்கள்.

5. குழந்தைகள் படிக்கும் அறை எப்படி இருப்பது சிறப்பு?

குழந்தைகள் படிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமர்ந்து படித்தால் இயல்பாகவே ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நமது முன்னோர்கள் இதை வலியுறுத்தி உள்ளார்கள்.

6. கழிவறையின் கோப்பைகள் மற்றும் குளிக்கும் திசைகள் எப்படி இருப்பது சிறப்பு?

கழிவறையில் உள்ள கோப்பைகள் கிழக்கு மற்றும் மேற்கு முகமாக இருக்கும்பொழுது இறைவனை அவமதிப்பதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் தெற்கு, வடக்காக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள். இதே விதிமுறைகள்தான் குளியலறைக்கும்.

7. வரவேற்பறையில் சோபாக்கள் மேஜைகள் எப்படி இருப்பது சிறப்பு?

நம் வீட்டினுள் நுழையும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்கும் பொழுது, நாம் நிற்கும் திசை இயல்பாகவே கிழக்கு-வடக்காக வரவேண்டும் என்பதை மையப்படுத்தி சோபாக்களையும், மேசைகளையும் மேற்கு முகமாகவும் தெற்கு முகமாகவும் அமைத்திருப்பார்கள்.

8. பணம் வைக்கும் பெட்டிகள் எப்படி இருப்பது சிறப்பு?

பணம் வைக்கும் அறை என்பது தென்மேற்கில் வரவேண்டும். அதிலும் குறிப்பாக பணம் வைக்கக்கூடிய பணப்பெட்டி அதாவது பீரோ லாக்கர் போன்றவை வடக்கு முகமாக இருப்பது சிறப்பு.
 உங்களுடைய வீட்டில்,கிழக்கு தலை வைத்து தினமும் தூங்கினால்,செல்வ வளம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;அப்படி அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது;எந்த ஒரு திருஷ்டியாலும் தடுக்க முடியாது;

மேற்கே தலைவைத்து தினமும் வீட்டில் தூங்கினால்,ஆயுள் அதிகரிக்கும்;

வடக்கே தலை வைத்து எப்போதும் தூங்கவே கூடாது;நோய்கள் வளரும்;மன நலம் பாதிக்கப்படும்;

தெற்கே தலைவைத்து வீட்டில் தினமும் தூங்கினால்,புகழ் அதிகரிக்கும்;

உங்களுடைய வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும்;

மேற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும்;

வடக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் வளரும்;உடலின் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்;

தெற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேவையற்ற வீண் பழிகள் வந்து கொண்டே இருக்கும்;

உணவகங்கள்,மெஸ்கள்,ஆஸ்டல்கள்,சாலையோர உணவகங்களில் சாப்பிடும் போது இந்த விதிகள் பொருந்தாது;

தெற்கு நோக்கி உங்கள் ஆடைகளை துவைத்தால் உங்களுக்கு வீண் சச்சரவுகளில் சிக்கும் சூழ்நிலை அடிக்கடி உண்டாகும்;

ஆண்டிராய்டு யுகமாக இருந்தாலும்,திசைகள் மாறுமா? சித்தர்கள் ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகள் இவை;நமது பாரம்பரிய பழக்கத்தை நாம் முறையாக பின்பற்றுவோம்;✍🏼🌹

விநாயகர் துதி

   🌹விநாயகர் துதி🙏
               

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே..
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே..
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா..
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா..
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்..
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா..
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே..
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே...

      🌹விநாயகா போற்றி
   விக்னேஸ்வரா போற்றி🙏

தமிழ் மாத சிறப்புகள் | பங்குனி மாதம் ! பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!

 பங்குனி மாதம் !

பங்குனி மாத விழாக்கள், விசேஷங்கள்!


தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. பங்குனி மாதத்தை வசந்த காலம் என்று அழைப்பார்கள். பங்குனி மாதத்தில்தான் பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு, கடவுள்களின் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திரம் என்று பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன.

14.03.2024 (பங்குனி 01) காரடையான் நோன்பு :


கார் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கௌரி ஆகிய காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதால் இது காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. இவ்விரத முறையானது மாசி மாதக் கடைசி நாள் தொடங்கப்பட்டு பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது. திருமணமான பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதால் தங்கள் கணவனின் ஆயுள் நீடிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் அவருக்கு வழங்குகிறாள்.

20.03.2024 (பங்குனி 7) காலை ஆமலாகீ ஏகாதசி :


ஏகாதசி, பெருமாளை வணங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு 'ஆமலகீ ஏகாதசி" என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும்.

25.03.2024 (பங்குனி 12) பங்குனி உத்திரம் :


12வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்திரத்தில்தான் சிவன் - பார்வதி, முருகன் - தெய்வானை, ராமன் - சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன. பங்குனி உத்திரம், சிவ மற்றும் முருகப்பெருமானை வழிபட உகந்த நாள். திருமணத் தடைகள் அனைத்தும் விலகும்.

24.03.2024 காலை 11:17 முதல் 25.03.2024 பிற்பகல் 01:16 வரை (பங்குனி 12) பங்குனி பௌர்ணமி :

பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழிபாட்டுக்கு பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும், மனமும் ஆரோக்கியமாகவும். கூடுதலாக வட இந்தியர்கள் கொண்டாடும் ஹோலிப்பண்டிகையும் இந்நாளில் வருகிறது.

05.04.2024 (பங்குனி 23) விஜயா ஏகாதசி :


ஏகாதசி பெருமாளுக்குரிய நாள். பங்குனி மாதத்தில் தேய்பிறை ஏகாதசிக்கு 'விஜயா ஏகாதசி" என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகாவிஷ்ணுவை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

08.04.2024 (பங்குனி 26) சர்வ அமாவாசை :


இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் 'அமாவாசை". இன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும்.

09.04.2024 (பங்குனி 9) யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு) :

தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு தினம் 'யுகாதி பண்டிகை". நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்த நவராத்திரியும் யுகாதி அன்றுதான் தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...