கோடீஸ்வரர் யோகம் தரும் மகாலக்ஷ்மியின் ஏலக்காய் மாலை வழிபாடு எப்படி செய்வது
மகாலக்ஷ்மியின் அம்சம் சில பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதில் கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவையும் அடங்கும். இதை சமையலுக்கு மட்டும் பயன்படுத்துவதால் சாதாரண பொருளாகி விடாது. கிராம்பும் ஏலக்காயும் மூலிகை வகையை சார்ந்த பொருட்கள் மகாலக்ஷ்மிக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் இவைகளும் அடங்கும் இந்த இரண்டையும் வைத்து செல்வ வளத்தை பெருக்குவது எப்படி வாங்க பார்க்கலாம்.
சிலருக்கு செல்வத்தின் மீது பிரியம் அதிகளவு இருக்கும். இது எல்லோருக்கும் இருப்பது தான். யாருக்குத்தான் செல்வந்தராக விருப்பமில்லை என்று சொல்லுங்கள்?
ஆனால் தன் குடும்பத்தில் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய அவர்களுக்கு அதிகமாக ஆசை இருக்கும் லட்சுமியை வசியம் செய்ய பலவிதமான வழிகள் உண்டு. பணம் சம்பாதிப்பது கடினமான காரியம் என்றாலும் அதைவிட சேர்த்த பணத்தை நிலைக்க வைப்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது.
ஒரு பக்கம் பணம் வந்து கொண்டே இருந்தாலும் மறுபக்கம் அது தங்காமல் தேவையற்ற வழிகளில் கரைந்து கொண்டே இருக்கும்.
அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படுதல், யந்திரங்கள் பழுதுபார்த்தல், வண்டி வாகன செலவுகள் என்று எதிர்பாராத விதமாக பல செலவுகள் உண்டாகிக் கொண்டே தான் இருக்கும். இதற்கு காரணம் என்ன அப்படிப்பட்ட இல்லத்தில் மகாலக்ஷ்மியின் அருள் இல்லை என்பதுதான் அர்த்தம். லக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது அது என்னவென்று தெரியுமா?
வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜைக்குரிய ஏற்பாடுகளை செய்த பின்பு குத்து விளக்கு ஒன்றை தனியே பூஜையில் வைக்கவும். விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
விளக்கின் பாதத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பூக்களில் மல்லிகை கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பின்னர் கிராம்புகளை 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளுங்கள். அதே எண்ணிக்கையில் ஏலக்காயும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை ஊசி நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து கொள்ள வேண்டும். கிராம்பை பூ கட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டிக்கொள்ள வேண்டும். நைவேத்யமாக சர்க்கரை பொங்கல், காய்ந்த திராட்சை, மாதுளம் பழம் 1, நெல்லிக்கனிகள் 5 இவற்றை ஒரு தட்டில் வைத்து விளக்கின் முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அதன் மீது 501 ரூபாய் காணிக்கை வைக்க வேண்டும். இந்த இரண்டு மாலைகளையும் விளக்கிற்கு சாற்றி விளக்கின் ஐந்து முகங்களையும் தீபமேற்ற வேண்டும்.
பூஜை செய்ய வேண்டிய நேரம்
காலை 6-7 மணிக்குள், மதியம் 1 - 2 மணிக்குள் இரவு 8 - 9 மணிக்கு
தீபம் ஏற்றும் போது மகாலக்ஷ்மி ஸ்லோகம் வாசிக்கவும்
தொடர்ந்து 21 வாரங்கள் இந்த வழிபாட்டை முறையாக செய்து வருவதன் மூலம் குபேர யோகத்தை அடையலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது
மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் மாலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை
அதன் நிறமும் மனமும் மாறும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளலாம்
இந்த பூஜையை வெள்ளிக்கிழமை செய்யமுடியாத நிலையில் பௌர்ணமியில் செய்யலாம்
மகாலக்ஷ்மி உங்களது வீட்டில் வாசம் செய்ய இந்த பூஜை முறை சிறந்த பலனளிக்கும் இடைதலும் சந்தேகம் இல்லை
முழு நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள் வாழும் வளமுடன்