[14/2, 5:29 am] null: கும்பிடுவது_என்பது🙏 ..
நமது பஞ்சேந்திரியங்கள் ( கண், காது, முக்கு, வாய், உடல் ) எப்போதும் வெளியே பயணித்துக்கொண்டே இருக்கும் ..
அப்படியான
இந்த பஞ்சேந்திரியங்கள் வழியே கிடைக்கும் அனுபவம் எல்லாம் நம்முள்ளே அந்த பஞ்சேந்திரியங்களின் மூலத்தோடு தொடர்பு படுத்தி ..
நம் மனம் ( நாம் பெற்ற அனுபவங்களின் குவியல் )..
நம் புத்தி ( நாம் கற்ற / பெற்ற அறிவு )..
கொண்டு எதையாவது ஆராய்கிறேன் என்று நம்மை ஓர் நிலையில்லா உணர்வு நிலையில் நம்மை அலைக்கழிக்கும் ..
இப்படி இந்த நிலையில் நாம் ஆட்படும்போது ..
வெளியே இந்த பஞ்சேந்திரியங்கள் என்ற புலன்கள் வழியே உணரப்படுவதே நம்மை ஆளும்..
இதில் நம்முள்ளே ஓர் நிலையில்லா தன்மையை ..
அதாவது பாவனை தன்மையில் நம்மை நிலைநிறுத்தும் ..
அதுவே கும்பிடுகிறோம் என்ற போது
நமது ஐந்து விரல்களாலும் ஒன்றோடு ஒன்று பிணைக்க ..
நம் கண்களாய் மூட !!
இந்த பஞ்சேந்திரியங்கள் என்று புலன்கள் புறத்தேடல் கடந்து உள்முகமாக ( நமக்குளேயே ) அதன் மூலத்தை நோக்கி பயணிக்க ..
உங்கள் எண்ணம், உணர்வு, மனம், போன்றவை அலைக்கழிப்பு என்ற சிதறல்கள் எல்லாம் ஒன்று கூடி ..
அவையெல்லாம் கடந்து உங்கள் உள்ள மூலத்தை அதாவது கட உள்ளை ( கடவுளை ) உணர்விக்கும் ..
அதுவரையில் அலைந்து, அலைக்கழித்த, ஓர் நிலையில் இல்லாது அல்லாடிக்கொண்டு இருந்த அத்தனையும் அடங்கும் ..
அதுவும் இந்த கும்பிடுதல் ..
பிரபஞ்ச ஆற்றலை கூட்டுவிக்கும், குவித்திருக்கும் இடங்களான ஆலயம், கோயில் போன்ற இடங்களில்
இடம்பெறும்போது நீங்கள் உங்களுள் ஆடுவது, அலைக்கழித்தது எல்லாம் அடங்கி ..
இந்த பிரபஞ்ச பேராற்றல் என்ற இறைப்பேற்றாற்றல் உங்களுள் நிறைய ..
உங்களுள் ஓர் சூனியம் ( ஏதுமற்ற நிலை ) சில வினாடிகளாவது உங்களை ஆக்கிரமிக்கும் ..
அப்படி இந்த பிரபஞ்ச இறையாற்றல் உங்களுள் ஒவ்வொரு அணுவாய் ஊடுருவ ..
உங்கள் நீங்கள் இதுவரை அனுபவித்திராத ஓர் சக்தி, தெம்பு, தைரியம், துணிவு, தெளிவு போன்றவை உணர்விக்க படும் ..
கும்பிடுகிறேன் என்பதில் இத்தனை நிகழ்கிறது ..
அனுபவித்து அறிந்து உணர வேண்டிய அற்புதம் இது ..
வாழ்க வளமுடன் !
சர்வம் விஷ்ணு மயம்🙏🌹
[19/2, 4:16 pm] null: 🙏திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் *குபேரனுக்கு படியளந்த நாள் (மாசிமாதம் 9ம் தேதி) 21/02/2024(புதன்கிழமை)
🙏🌹🙏 திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
புராண சிறப்பு:
முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.
தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்து நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.
குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று தாமிரபரணி நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.
வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.
இலக்கியச் சிறப்பு:
பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
தனிச்சிறப்பு:
நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.
அமைவிடம்:
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம் : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம் : வைகாநச ஆகமம்
விமானம் ஸ்ரீகர விமானம்
சிறப்பு செய்தி:
குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது,
மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று என்பதாகும்.
இந்த நாள் இந்த வருடத்தில் புதன்கிழமை 21/02/2024. செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் *அன்றைய தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.
[19/2, 4:21 pm] null: ஸ்ரீராமஜெயம்
*மஹாலக்ஷ்மி தாயிடம் சரணாகதி🌹
மஹாலெட்சுமி தாயிடம் சரணாகதி அடையும்போது, அவள் நம்மை கடாக்ஷிப்பதுடன், அவளுடைய ஸ்தானத்துக்கு நம்மையும் உயர்த்தி விடுவாள். இதுதான் மஹாலக்ஷ்மியின் கருணை!
அவளைத் தேடித்தேடிச் சரணடைய, உரிய தலங்களை நாம் நாடியோட வேண்டும். இங்கே அத்தகைய சில தலங்கள் பற்றி, குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.
கடிகாசலம் என்னும் சோளிங்கர் திருத்தலத்தில் தாயாருக்கு அமிர்தவல்லி நாச்சியார் என்று திருநாமம். தன்னையே அமிர்தமாக அந்த யோக நரஸிம்மருக்குக் கொடுத்தவள். மஹாலக்ஷ்மியாகிய அமிர்தவல்லி நாச்சியார் பெருமாளின் திருமார்பில் நீங்காமல் இருப்பதால், பக்தர்களை எல்லாம் கூப்பிட்டு அனுக்கிரஹம் பண்ணுவதுபோல் பெருமாள் திருக்காட்சி தருகிறார்.
அதேபோல், கமலாதேவி என்னும் திருப்பெயர் கொண்டு மஹாலக்ஷ்மி எழுந்தருளி இருக்கும் திருத்தலம் உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில். இங்கே பிராட்டிக்கு கமலவல்லி என்ற திருநாமம். இந்தத் தலத்தில்தான் திருப்பாணாழ்வார் அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாலக்ஷ்மி தாயார் எத்தனையோ திவ்வியதேசங்களில் எழுந்தருளி நம்மையெல்லாம் கடாக்ஷிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த திவ்வியதேசங்களில் மகாலக்ஷ்மி தாயாருடன் தாயின் அம்சமான பூமிதேவி, நீளாதேவியும் உடன் இருந்தாலும் மகாலக்ஷ்மியே பிரதானம். பகவான் எப்போதும் இந்த மூன்று தாயாருடனே திருக்காட்சி தருவார். இதனையே நம்மாழ்வார்,
‘உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள்ஆயர்மடமகள் என்றிவர் மூவர்…’ என்றும்,
‘கூந்தல்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் குலக்கொழுந்துக்கும் கேள்வன்தன்னை…’
என்றும் பாடி இருக்கிறார்.
மகாலக்ஷ்மி தாயாரின் கடாக்ஷம் நமக்கெல்லாம் கிடைக்கச் செய்யும் எத்தனையோ பல திவ்வியதேசங்கள் நம்முடைய புண்ணியபூமியில் அமைந்திருக்கின்றன. அப்படி இருக்க, மகாலக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும் அல்லவா… ஆனால், கிடைக்கவில்லையே? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
சிந்தித்தால், நாம் பரிபூரணமாக அவளிடம் சரணாகதி பண்ணவில்லை என்ற உண்மை நமக்குப் புரியும்.
ராமாயணத்தில் ராவணனுக்கு அறிவுரை சொல்லி வந்த விபீஷணன், இரண்ய வதத்தைப் பற்றி குறிப்பிடும்போது, இரண்ய வதத்தினால் நரஸிம்ம மூர்த்திக்கு ஏற்பட்ட சினத்தின் உக்கிரத்தைத் தணிவிக்க, தேவர்கள் மகாலக்ஷ்மி பிராட்டியாரை நரஸிம்ம பெருமாளுக்கு அருகில் அனுப்பி வைத்து சினத்தின் உக்கிரத்தைத் தணிவித்ததாக கூறினான். இதைப் பற்றி விவரிக்க வந்த கம்பர்,
’பூவில் திருவை அழகின் கமலத்தை!
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை! ஆவித்துணையை அமுதின் பிறந்தாளை! தேவர்க்கும் தாயை…’
அதாவது, தாமரை மலரின்மேல் இருந்தபடி அருளும் அந்த தேவியானவள், அமுதத்தோடு பிறந்தவள்; அனைவருக்கும் செல்வத்தை அருள்பவள்; வீடு என்னும் பேரின்பத்தையும் நமக்கெல்லாம் அருள்பவள் என்று போற்றுகிறார்.
இந்திரனுக்கு அவன் இழந்த செல்வத்தைத் திரும்பவும் அருளியவள் கருணையே வடிவான மகாலக்ஷ்மி தாயார். அவளுடைய திருக்கோயில்களை நாடிச் சென்று அவளுடைய திருவடிகளைச் சரண் அடைந்தால், அவளுடைய கடாக்ஷம் நமக்கெல்லாம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகளே சரணம்🌷
Subscribe to:
Post Comments (Atom)
செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:
பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...

-
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏽🕉🥀✡🌼🌸🌻🙏 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ! ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நம!! 🙏🌺🕉🌹☀🌸🔆💢🏵🌷🙏 ஸ்ரீ ராம ராம ரா...
-
Kaithala Niraikani - Thirupugazh - Tamil Lyrics Kaithala Niraikani - Thirupugazh - English Lyrics Kaithala Niraikani - Thirup...
-
Sri Devi Khadgamala Stotram in Tamil ஶ்ரீ தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம் பாடல் வரிகள் (sri devi khadgamala stotram) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment