Showing posts with label பக்தி கதைகள்/ Bhakthi Stories. Show all posts
Showing posts with label பக்தி கதைகள்/ Bhakthi Stories. Show all posts

Thursday, September 19, 2024

உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி? புரட்டாசி மாதம்

 உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி?

பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார்.  சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார்.  வந்து சேவை  கொடுக்கிறார்.  அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.  ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார்.  அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான்.  இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை.

 

 


 

 

ஆனால் அவர் ரொம்ப சதுரர் - கெட்டிக்காரர் - பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள்.  உன்னிடம் எது இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார்.

உடனே பரமாத்மா கேட்டானாம் - இவ்வளவு கேட்கிறீரே ... நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?
உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி? என்றார் பக்தர்.

என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா? பகவான் கேட்கிறார்.
அதைத்  தெரிஞ்சு வச்சுண்டுதான் அதைக் கொடுக்க வந்தேன்.

என்னது அது?

கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன் நீ சஞ்சாரம் பண்ணினாய் அல்லவா .. அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆகையினாலே உன் மனசு உன்னிடத்தில் இல்லை.. அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்.. என்றார் பக்தர்.
.
பகவான் பதிலே சொல்லலை.  வாயை மூடிக் கொண்டு விட்டார்.
.
ஆகவே மனசை சமர்ப்பிக்கணும்.  தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனசை அர்ப்பணிக்கலைன்னா ஏற்பானோ அவன்.? எதுவாயிருந்தாலும் மனசுடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப்படுவதுதான் உயர்த்தி என்று உணர்த்தத்தான் அந்த பக்தர் மனசையே அர்ப்பணித்தேன் என்றார்.
.
பூரணனான  அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான்.  இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான்.  நம் மனசை சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான்.
.
எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள், ஆயுதங்களுடன் இருக்கிறான்; பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது.

Tuesday, April 16, 2024

ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை!

 ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை!



பக்தி கதை!



ஒருநாள் நாரத முனிவர் ஆஞ்சநேயனை சந்தித்தார்.

“ஆஞ்சநேயா, இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்?

திரிலோக சஞ்சாரியே!
என் உயிர் மூச்சே ஶ்ரீராமர் தானே ஆகவே மூச்சு முடியும் வரை ஶ்ரீராமபிரான் தான் எனக்கு எல்லாம்.

”நாரதர் சிரித்தார். “ஏன் சிரிக்கிறாய் நாரதா?

நிஜத்தை விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய். என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது.

 

 

 

 

 

 

 

 

 


 

 

எனக்கு புரியவில்லையே?

எப்படி புரியும்?புரிந்து கொள்ள முயற்சித்தால் அல்லவோ புரியும்!”

நாரதா நிஜம்-நிழல் என்கிறாய்.

என் ராமர் நிழலா?”ஆம் வேறென்ன?

நாராயணின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமர் மறைந்தார்.

வேறு அவதாரம் தொடங்கிவிட்டாரே!
இந்த புது யுகத்தில்!!

என்ன சொல்கிறாய் நாரதா?

என் ராமர் என்னவாக புது அவதாரம் எடுத்துள்ளார்? எங்கிருக்கிறார்?சொல்லேன்?

“இந்த துவாபர யுகத்தில்
அவர் பெயர் கிருஷ்ணன் த்வாரகையில் உள்ளார்.

சமீபத்தில் அவரிடம் பேசும்போது தான் உன்னை பற்றியும் பேச்சு வந்தது.

“என் பிரபு என்னை நினைத்து கொண்டிருக்கிறாரா?

கேட்கவே ரொம்ப புளகாங்கிதம் அடைகிறேன்.

நான் என் பிரபுவை உடனே பார்க்க வேண்டுமே!

உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால் இப்படிப்
போக முடியாது.

ராமநவமியன்று மாறு வேடத்தில் துவாரகைக்கு வா. அன்னதானம் செய். நான் அப்புறம் உன்னை பார்க்கிறேன் என்று கூறி நாரதன் நகர்ந்தான்.

ஆஞ்சநேயன் ஒரு பிராமணன் வேடத்தில் துவாரகை சென்றான்.

துவாரகையில் ஸ்ரீராம நவமி அன்று அன்னதானம் அளித்தான்.

எண்ணற்றவர்களுக்கு
தன் கையாலேயே அன்னமிட்டான்.

வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும் அயராது ஆஞ்சநேயன்
குனிந்து ஸ்ரத்தையோடு அனைவருக்கும் இலையில் அன்னமிட்டான்.

இன்று ராமரைக் காணலாம் என்றாரே நாரதர்? எப்போது ராமரைப் பார்ப்பது? அவரை எங்கே சந்திப்பது?எங்கே போய் தேடுவது?மனதில் எண்ண ஓட்டம்.

இருந்தாலும் கை அன்னத்தை பரிமாறிக் கொண்டு இருந்தது.

ராமனையே த்யானம் செய்துகொண்டு ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஹனுமான் அனைவருக்கும் தானே உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஆஞ்சநேயனுக்கு தலை சுற்றியது,கை கால்கள் தானாக துவண்டது.

மூச்சு வாங்கியது, என்ன ஆயிற்று எனக்கு?

ஆஞ்சநேயனுக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது என்றோ புரிபட வில்லை.

ஒரு வரிசையில் ஒரு கால் மடக்கி மறுகாலை கொஞ்சம் நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஒரு வயோதிக பிராமணருக்கு எதிரில் அப்போது ஆஞ்சநேயன் குனிந்து கையில் அன்ன வட்டிலோடு பரிமாற நின்றவன் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.

ஏன்? ஏன்? இது எதற்காக?

நான் என்ன அபசாரம் செய்து விட்டேன்?” ஆஞ்சநேயன் கதறினான்.

அந்த மனிதரின் கால்கள் அவனுக்கு நிறைய பரிச்சயமானவை.

சாக்ஷாத் ராமனின் கால்கள்”.

பிரபு என்னை இப்படியா சோதிக்கவேண்டும்? அலறினான் ஆஞ்சநேயன்,

பிராமணர் சிரித்தார்.

மெதுவாக எழுந்தார்.

அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பிராமணரான நாரதரும் எழுந்தார்.

கிழ பிராமணர் வேடத்தைக் களைந்து கிருஷ்ணன் ஆஞ்சநேயனை ஆரத்தழுவி கொண்டார்.

நீண்ட பிரிவல்லவா?

ஆஞ்சநேயா உன் கையால் சாப்பிட ஆசை வந்தது.

எனவே நானும் நாரதனும் உனைக்காண வந்தோம்.

”“பிரபு எனக்கு ஒரு வருத்தம்!”

என்ன ஆஞ்சநேயா?

நான் உடனே துவாரகைக்கு வரவேண்டும் உங்களையும் என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

உங்களைத் தனியாக பார்த்தால் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து வதைக்கின்றன.

பிரிவால் தாங்கள் வாடியதேல்லாம் நினைவுக்கு வந்து என்னை வாட்டுகிறது.

இனியும் உங்களை தனியாக பார்க்க என்னால் முடியாது?

என் உடம்பில் தாங்கும் தெம்பில்லை.

“வாயேன் எங்களோடு” ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு துவாரகை சென்றான்.

ருக்மிணி என்கிற உருவில் தனது மாதாவைக் கண்டான்.

பலராமன் என்ற உருவில் லக்ஷ்மணனையும் கண்ணாரக் கண்டு களித்தான்.

பேச்சே எழவில்லை இரு கைகளும் தாமே மேலேழும்பி, குவிந்தன மனம் லேசானது.

நினைவெல்லாம் மனத்தில் அவனாகவே நிரம்பி வழிந்தது.

 வாய் மெதுவாக சுவாசத்தோடு கலந்து

‘ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” என்று உச்சரிக்கும்போது கண்கள் மூடிக்கொண்டன.

கண்கள் மூடினால் என்ன. உள்ளே தான் அவன் விஸ்வரூபனாக ராமனாக, கிருஷ்ணனாக காட்சி தருகிறானே.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம!!!


செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...