Tuesday, January 30, 2024

ஸ்ரீ முருகன் தரிசனம் தெய்வமணி மாலை

 ஸ்ரீ முருகன் தரிசனம்

தெய்வமணி மாலை

நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு
விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு
நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட
நெறி உண்டு நிலையும் உண்டு
ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு
உடை உண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு
சாந்தம்உறும் உளம் உண்டு வளமும் உண்டு
தேர் உண்டு கரி உண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு
தேன் உண்டு வண்டுறு கடம் பணியும் நின்பதத்

தியான முண் டாயில் அரசே  தார் உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே..!

- வள்ளலார்


No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...