Tuesday, February 20, 2024

கும்பிடுவது_என்பது

 கும்பிடுவது_என்பது🙏 ..




நமது பஞ்சேந்திரியங்கள் ( கண், காது, முக்கு, வாய், உடல் ) எப்போதும் வெளியே பயணித்துக்கொண்டே இருக்கும் ..
அப்படியான
இந்த பஞ்சேந்திரியங்கள் வழியே கிடைக்கும் அனுபவம் எல்லாம் நம்முள்ளே அந்த பஞ்சேந்திரியங்களின் மூலத்தோடு தொடர்பு படுத்தி ..

நம் மனம் ( நாம் பெற்ற அனுபவங்களின் குவியல் )..
நம் புத்தி ( நாம் கற்ற / பெற்ற அறிவு )..
கொண்டு எதையாவது ஆராய்கிறேன் என்று நம்மை ஓர் நிலையில்லா உணர்வு நிலையில் நம்மை அலைக்கழிக்கும் ..

இப்படி இந்த நிலையில் நாம் ஆட்படும்போது ..
வெளியே இந்த பஞ்சேந்திரியங்கள் என்ற புலன்கள் வழியே உணரப்படுவதே நம்மை ஆளும்..
இதில் நம்முள்ளே ஓர் நிலையில்லா தன்மையை ..
அதாவது பாவனை தன்மையில் நம்மை நிலைநிறுத்தும் ..

அதுவே கும்பிடுகிறோம் என்ற போது
நமது ஐந்து விரல்களாலும் ஒன்றோடு ஒன்று பிணைக்க ..
நம் கண்களாய் மூட !!

இந்த பஞ்சேந்திரியங்கள் என்று புலன்கள் புறத்தேடல் கடந்து உள்முகமாக ( நமக்குளேயே ) அதன் மூலத்தை நோக்கி பயணிக்க ..

உங்கள் எண்ணம், உணர்வு, மனம், போன்றவை அலைக்கழிப்பு என்ற சிதறல்கள் எல்லாம் ஒன்று கூடி ..
அவையெல்லாம் கடந்து உங்கள் உள்ள மூலத்தை அதாவது கட உள்ளை ( கடவுளை ) உணர்விக்கும் ..

அதுவரையில் அலைந்து, அலைக்கழித்த, ஓர் நிலையில் இல்லாது அல்லாடிக்கொண்டு இருந்த அத்தனையும் அடங்கும் ..

அதுவும் இந்த கும்பிடுதல் ..
பிரபஞ்ச ஆற்றலை கூட்டுவிக்கும், குவித்திருக்கும் இடங்களான ஆலயம், கோயில் போன்ற இடங்களில்
இடம்பெறும்போது நீங்கள் உங்களுள் ஆடுவது, அலைக்கழித்தது எல்லாம் அடங்கி ..
இந்த பிரபஞ்ச பேராற்றல் என்ற இறைப்பேற்றாற்றல் உங்களுள் நிறைய ..
உங்களுள் ஓர் சூனியம் ( ஏதுமற்ற நிலை ) சில வினாடிகளாவது உங்களை ஆக்கிரமிக்கும் ..

அப்படி இந்த பிரபஞ்ச இறையாற்றல் உங்களுள் ஒவ்வொரு அணுவாய் ஊடுருவ ..
உங்கள் நீங்கள் இதுவரை அனுபவித்திராத ஓர் சக்தி, தெம்பு, தைரியம், துணிவு, தெளிவு போன்றவை உணர்விக்க படும் ..

கும்பிடுகிறேன் என்பதில் இத்தனை நிகழ்கிறது ..

அனுபவித்து அறிந்து உணர வேண்டிய அற்புதம் இது ..


No comments:

Post a Comment

செல்வத்துக்கு அதிபதியாக திகழும் குபேரன்:

 பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். த...