அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்றுவலம் வருவதற்கு காரணம் என்னவென்று
தெரியுமா ?
அன்றுதான் அன்னை பராசக்தி,
அருணாசலேஸ்வரரை வலம் வந்து
இடப்பாகம்பெற்றாள். அன்று சந்திரன்
சூரியனிடம் இருந்து #சக்திகளை அதிக
அளவில் பெற்று, அதைவெளியிடும்
#பூர்ணநிலாவாக உலா வருகிறான்.
அந்த
ஒளி, மலை மீது பட்டுபிரதிபலிக்கும்போது,
அது நமது உடலுக்கும் நம்மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத்தெரியாமலே
செய்கின்றது.
இதனால்பௌர்ணமி
மலைவலம் சித்தர்களால் சிறப்பாக
போற்றப்படுகிறது.
இன்றும் திருவண்ணாமலையில் #சித்தர்கள்சூட்சும வடிவில் வலம் வருவதாகக்கூறப்படுகிறது.
பௌர்ணமி நாள் அன்றுமட்டும்தான்
கிரிவலம் வரவேண்டுமா?
வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.
பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின்நினைவு நாள் என்று எந்நாளும்சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.
No comments:
Post a Comment